கந்தர்வக்கோட்டையில் 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா - எம்.எல்.ஏ. சின்னதுரை வழங்கினார்

முதுகுனம்மற்றும் சேவியர் குடிகாடு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா அரவம்பட்டியில் நடைபெற்றது.விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
கந்தர்வக்கோட்டையில் 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா - எம்.எல்.ஏ. சின்னதுரை வழங்கினார்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாஅரவம்பட்டி, முதுகுனம்மற்றும் சேவியர் குடிகாடு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா அரவம்பட்டியில் நடைபெற்றது.

விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புதியரசன் தலைமை தாங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக்மழவராயர், ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத்தலைவர் அருண் பிரசாத், கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com