என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
Byமாலை மலர்11 Feb 2023 9:16 AM GMT (Updated: 11 Feb 2023 9:17 AM GMT)
- பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி:
மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென் திருப்பதி என்றழைக்கப்படும், மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணி கார்த்திகேயன் அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X