என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்
    X

    ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்

    • ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது
    • பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர ;பாம்பினோ பாஸ்தாபுட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக உரையாற்றினார்.

    பின்னர் பெற்றோர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பளர் கௌரி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், கணியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன், ராமன், உடற் கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி, தஞ்சாவூர் தொழிலதிபர் செல்வம், பாம்பினோ பாஸ்தா நிறுவனத்தைச் சார்ந்த மணிசேகரன், ஆனந்த், பிரதீப் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான உணவுமுறைகள் பற்றிய இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாத அமைந்ததாக பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.


    Next Story
    ×