என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
    X

    புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

    • புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் எம்.பி.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்எல்ஏக்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×