search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரிகளில் குடிநீர் வினியோகம்
    X

    லாரிகளில் குடிநீர் வினியோகம்

    • நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
    • குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று ஏற்பாடு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையிலும், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாகவும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நேற்று முதல் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவள்ளுவர் நகர் கோல்டன் நகரில் அருகே லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதை பொதுமக்கள் வரிசையில் நின்று குடங்களில் பிடித்து சென்றனர். இதனை தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திலும், பல்வேறு திட்டப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×