search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா - நாளை நடக்கிறது
    X

    புதுக்கோட்டை மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா - நாளை நடக்கிறது

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ., இ.சி.இ., சி.எஸ்.இ., ரோபோட்டிக் மற்றும் ஆட்டோமேஷன் பாடங்களும், பி.டெக். பிரிவில் ஆர்ட்டிபீசியல் இண்டலிஜன்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிசினஸ் சிஸ்டம், எம்.இ. பிரிவில் வி.எல்.எஸ்.ஐ. டிசைன், எம்.எப்.ஜி. என்ஜினீயரிங், சி.எஸ்.இ., ஸ்ட்ரக்‌ஷரல், பவர் சிஸ்டம்ஸ் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

    பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை கொண்ட மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவில், இந்திய விண்வெளி மைய (இஸ்ரோ) முன்னாள் துணை இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவையின் துணைத்தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×