என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
    X

    புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×