என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
- காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி தலைமையில் மற்றும் கறம்பக்குடி நகர வர்த்தக சங்கம் முன்னிலையில் ஆன்லைன் முகவர்களை அழைத்து குற்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றியும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது பற்றியும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மேலும் நகர வர்த்தக சங்கத்தின் சார்பாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் நியமிக்க கோரியும், போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் குற்ற பிரிவு காவலர்களை நியமிக்க கோரியும் கறம்பக்குடி நகர் பகுதியில் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் மூலம் கூடுதல் கேமராக்கள் வைக்கவும், கறம்பக்குடி பேரூராட்சியில் கால்நடைகளை அப்புற படுத்தவும் கோரிக்கைகள் வைத்தனர்.
Next Story






