search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்
    X

    சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்

    • சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 390 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதாபண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதி யில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி இன்று ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்த முயன்றனர்.ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. வாகத்தை பிடிப்பதற்காக போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், 390 மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. பின்னர் வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×