என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்
- சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது
- டிரைவர் தப்பி ஓட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 390 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதாபண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதி யில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி இன்று ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்த முயன்றனர்.ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. வாகத்தை பிடிப்பதற்காக போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், 390 மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. பின்னர் வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்