search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள்
    X

    புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள்

    • புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது
    • போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி தனியார் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஒவியப்போட்டிகள் நடைபெற்றது. எல்.கே.ஜி, மற்றும் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50 பேராசிரியர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், கம்பன் கழக நிர்வாகி பாரதி, கல்வியாளர்கள் கருப்பையா, பழனிச்சாமி, கோவிந்தராஜன், ராமசாமி, முருகையன், பழனியப்பன், செல்லத்துரை குமார், வள்ளியம்மை, கருணாகரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நகர்மன்றத்தில் 48-வது கம்பன் பெருவிழா அடுத்தமாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

    Next Story
    ×