search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் தூய்மை சேவை பணிகள்
    X

    பள்ளிகளில் தூய்மை சேவை பணிகள்

    • புதுக்கோட்டையில் பள்ளிகளில் தூய்மை சேவை பணிகள் நடைபெற்றது
    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நபார்டு வளர்ச்சி வங்கி முன்னோடி வங்கி, பள்ளிக்கல்வித்துறை, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, கிரின்கேர் பவு ண்டேசன் ஆகியவை இணைந்து புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, முதன்மை கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒரு முறை ஒரு மணி நேரம் என்ற தலைப்பின் கீழ் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி மற்றும் மர க்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நபார்டு வங்கியின் மாவட்ட வள ர்ச்சி மேலாளர். தீபக்கு மார் வரவேற்று பேசினார்.

    முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி யின் தலைமையாசிரியர் தமிழரசி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் ( உயர்நிலை) ராஜு, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில்,பள்ளித்துணை ஆய்வா ளர் மாரிமுத்து, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பின் ஆதப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.நிகழ்ச்சியில் பள்ளி வளா கங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மையை பாதுகாப்பதில் தன்னார்வலர்களின் இன்றியமையா பங்கு பற்றி எடுத்துக்கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கிரி ன்கேர் பவுண்டேசன் ஒரு ங்கிணைப்பாளர் ரெங்க சாமி, திருவருள் மற்றும் பலர் சூழலியல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×