என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பகுதிகளில் சி.சி.டி.வி.கேமராக்கள்
- ஆலங்குடி பகுதிகளில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
- மக்கள் பாதுகாப்பை கருதி
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அனைத்தும் பழுதாகி நின்றது. இனிவரும் காலங்கள் திருவிழா நிறைந்த காலங்களாக இருப்பதினால் நகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகரில் பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருவதை ஒட்டி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கைவைத்ததனர்.அதன்படி ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையில் போலீசார் ஆலங்குடியில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதிகளான காமராஜர் சிலை, அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம், மற் றும் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்து பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் மக்கள் கூட்ட ம் நகரில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கண்காணிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப் படுத்தும் விதமாக பெண்கள் ஆண்கள் நகைகள் அணிந்து வருவது பொதுமக்கள் இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் வைப்பது மற் றும் திருட்டு, குற்ற சம்பவங்கள் திருவிழா காலங்களில் சம்பவங்க ளை தடுக்கும் விதமாக சிசிடிவி முன்னெசரிக்கை நடவடிக் கையாக கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.






