என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி
- பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
- திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முருக பெருமானின் ஆறுபடைவீடுகளிலும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போன்று முருகபெருமானின் பிற ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா நடைபெறும். அந்த வகையில் அறந்தாங்கி சின்ன அண்ணாநகரில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.