என் மலர்
உள்ளூர் செய்திகள்

விராலிமலை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா
- விராலிமலை சிங்கத்தாகுறிச்சியில் மாம்பாடி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் சிங்கத்தாகுறிச்சியில் மாம்பாடி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து கோவிலில் 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட
புனிதநீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மாம்பாடி அய்யனார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் சிங்கத்தாகுறிச்சி, ஆட்டுக்காரன்பட்டி, வங்காரம்பட்டி, மாத்தூர், மண்டையூர், ஆவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கிராம பட்டையதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






