என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன
- பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.கடந்த 14 நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வந்த விழிப்புணர்வு போட்டியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை எவ்வாறு பிரிப்பது, பிரித்த குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
விழிப்புணர்வு போட்டியில் கலந்து கொண்டு வென்ற மாணவ , மாணவியர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ஆனந்த் சான்று மற்றும் பரிசுகளை வழங்கினார்.நகராட்சி ஆணையர் லீமாசைமன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்