search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தன மரங்களை அறுத்து கடத்த முயற்சி
    X

    சந்தன மரங்களை அறுத்து கடத்த முயற்சி

    • 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை அறுத்து கடத்த முயற்சி நடைபெற்று உள்ளது
    • புகாரின் பேரில் கடத்தல் முயற்சி நபர்களை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்


    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான, ஒரு சந்தன மரத்தை அறுத்து சாய்த்தும் மற்ற ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை அறுத்தும் மர்ம நபர்கள் சாய்த்தனர். மேலும் இந்த மரங்களின் மைக்ரோ சுமார் 8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் சந்தன மரங்களை பாதியில் மரத்தை அறுத்து சாய்த்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்

    Next Story
    ×