என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்
- அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை விராலிமலையில் நடைபெற்றது
- டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 11 அமைச்சர்கள் பங்கேற்பு
விராலிமலை,
மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வருகின்ற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், கேபி.முனுசாமி, ஓ எஸ் மணியன், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், வளர்மதி மற்றும் 5000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் அதிகப்படியான வாகனங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை நடைபெறாத வகையில் அந்த மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்று எடுத்து கூறினர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்களும் தற்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.கேபி முனுசாமி பேசுகையில்: முதலமைச்சராக இருக்கும் தன்னை பதவி விலக சொல்வதாக கூறி தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார். அந்த தர்மயுத்தத்தில் நானும் இருந்தேன். ஆனால் தற்பொழுது அவர்களுடன் ஒன்று சேர்ந்து போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி வெறும் 2000 பேரை வைத்துக் கொண்டு மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து தற்பொழுது பொதுச் செயலாளராகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்:எடப்பாடி பழனிச்சாமி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் சிறந்த தலைவராக உருவெடுத்து கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் என்றார்.






