என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் காயம்
- வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் காயமடைந்தனர்.
- விவசாய கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி சென்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்ப்பதற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்கள் ஏற்றிச் செல்லப்படுகிது.அந்த வகையில் ஆவுடையார்கோவில் பகுதியில் விவசாய வேலை பார்ப்பதற்காக, சுப்பிரமணியபுரம் பகுதியிலிருந்து 2 டாட்டா பிக்கப் வாகனத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
வாகனங்கள் பனையவயல் அருகே சென்று கொண்டிருக்கையில், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சித்துள்ளது, அப்போது எதிர்பாராத விதமாக பின்னே சென்ற வாகனம் மோதியதில் முன்னே சென்ற வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 5 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர், காயமடைந்த பார்வதி (வயது 50), சிந்தாமணி (60), வசந்தா (50), அஞ்சம்மாள் (55), பூங்கொடி (37) ஆகிய 5 பேரை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் விபத்து குள்ளாகி 5 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.