திருமயத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி கடத்தல்

திருமயத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி லோடு ஆட்டோவில் கடத்தப்பட்டதுஅரிசி கடத்திய பெண் உள்பட இருவர் கைது
திருமயத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி கடத்தல்
Published on

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருமயம் தாலுகா கொசப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 28 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை கடத்திச் சென்ற வண்டியின் டிரைவர் திருமயம் வாரியப்பட்டியைச் சேர்ந்த தைனிஸ் (65) என்பவரையும் அந்த வாகனத்தில் இருந்த திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மருதமுத்து மனைவி ரஞ்சிதம்(41) என்பவரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com