search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கந்தர்வகோட்டை அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அசோக ராஜன் தலைமை தாங்கினார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அசோக ராஜன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய காவலர்கள் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சையது ஆலம் செய்திருந்தார்.

    Next Story
    ×