என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழாவையொட்டி புத்தகம் வாசித்து மாணவர்கள் விழிப்புணர்வு
    X

    புத்தக திருவிழாவையொட்டி புத்தகம் வாசித்து மாணவர்கள் விழிப்புணர்வு

    • புதுக்கோட்டையில் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • மாவட்டம் முழுவதும் அனைவரும் வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளின்படி புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டையில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவை இந்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

    அதனுடைய ஒரு நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழிகாட்டுதல்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைவரும் வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளின்படி புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் பள்ளி நூலக நூல்களை வாசித்தனர்.

    அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் பள்ளி நூலக புத்தகங்களை வாசித்தனர்.

    குரல் மணி கதைகள், டார்வின் ஆய்வும் விளைவும், கல்விக்கு முதலிடம், நல்லாசிரியரும் நன் மாணவரும், சிந்தனை சிதறல்கள், மறைமலை அடிகளார் கடிதங்கள், பாவேந்தரின் பாட்டு கதைகள், குறள் தந்த பரிசு, விண்வெளிப் பயணம், அறிவியல் வல்லுனர்கள், சுத்தமே சுகாதாரம் போன்ற பல்வேறு நூல்கள் அடங்கிய நூல்களை வாசித்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெயஜோதி, மணி, சுவாமிநாதன், மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×