search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    • புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    திருவிழா முன்னேற்பா டுகள் குறித்து நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தலை மையில் வேளாங்க ண்ணியில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நாகை திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும்,

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகவும்,

    குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ள தாகவும் தெரி வித்தார்.

    மேலும் வேளா ங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களான ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×