search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரியில் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி
    X

    சூளகிரியில் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி

    • சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.
    • பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழி யர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியில் முக்கியமான சாலையான ஒசூர்-பேரிகை சாலை, ஒசூர்-கிருஷ்ணகிரி சாலை, உள்ளது.

    இந்த சாலைகளில் அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் , அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், சார் பதிவகம் உள்பட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    இதனால் சாலையில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×