என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரவுவில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதி
- வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- இப்பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததாலே மின்விநியோகம் தடை படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடி மின் நிலையத்திற்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆங்காங்கே மின்தடைகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறுதூறல் விழுந்தாலே வேப்பிலைபட்டி கிராமம் முழுவதும் இரவு நேரங்களில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் தூக்கம் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததாலே மின்விநியோகம் தடைபடுகிறது.
பொம்மிடி மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொண்டால் மின் விநியோகம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் மின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






