என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
    X

    குண்டும்,குழியுமாக உள்ள சாலையை படத்தில் காணலாம்.

    சாலை வசதி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

    • இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை
    • குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்,

    தொழில் நகரமான ஓசூர் பகுதி மாநகராட்சி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உரிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை என்பது ஓசூர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வேதனையாக உள்ளது. அந்த அளவுக்கு ஓசூர் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டு ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள 29, 34, 36, 37, 38, 39, 40, 41 என 8 தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகிறது.

    இது தவிர அப்பகுதியில் , சாக்கடை கால்வாய்கள், பூங்கா ஆகியவை பராமரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டும் தண்ணீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஏற்ற மாநகராட்சி அதன் பின்பு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதிய சாலைகளை அமைக்க 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    நிதி ஒதுக்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை,

    குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், இல்லையெனில் மாநகராட்சி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×