என் மலர்
உள்ளூர் செய்திகள்

தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் சாலை.
ஜல்லி, மணல் இல்லாமல் தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்
- மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
- அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார்
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பாண்டியன் நகரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் செலவில் தெருக்களுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், முதல் நாள் சாலையை ஜே.சி.பி. வாகனம் மூலம் கிளறிவிட்டு, மறுநாள் ஜல்லி இல்லாமல் புதிய யுக்தியை கையாண்டு மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், நிலக்கோட்டை யூனியன் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் துணையுடன் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அதனை மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் ஜல்லி, மணல் ஆகியவற்றை பயன்படுத்தி தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






