என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர், ஜூலை. 8-

    ராகுல் காந்தி மீது 2019- ஆம் ஆண்டில் போடப்பட்ட அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்த மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    இதனை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாநில செயலாளர் வீரமுனிராஜ், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மாநகர துணைத்தலைவர் சிவப்பா ரெட்டி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×