search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு - ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
    X

    விசைப்படகு

    மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு - ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
    • இதைக் கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுடன் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ஒருநாள் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×