என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் உற்பத்தி பாதிப்பு- குடிநீர் வினியோகத்தில் தடை
    X

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் உற்பத்தி பாதிப்பு- குடிநீர் வினியோகத்தில் தடை

    • மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதால் அங்குள்ள எந்திரங்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த ஒரு வாரமாக 5 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இங்கு தினமும் 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு அடையாறு, ஆலந்தூர், பெசன்ட்நகர், திருவான்மியூர், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதால் அங்குள்ள எந்திரங்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த ஒரு வாரமாக 5 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நீலாங்கரை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பெசன்ட்நகர், துரைப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வினியோகம் சரி செய்யப்பட்டு வரும் நாட்களில் குடிநீர் உற்பத்தி சீராகும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×