என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் :மேயர் வழங்கினார்
- மாநகராட்சி அலுவலகத்தில், 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
- தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில், 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்,
அதனைதொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணி மேற்கொண்ட ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






