search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் பரிசளிப்பு விழா
    X

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் பரிசளிப்பு விழா

    • மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.
    • சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் இணையவழி மூலம் ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தான் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தானில் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது, கணக்கு வாய்ப்பாடு, ஆங்கிலத்தில் கதை சொல்வது என பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.

    இதனை சரிவர முடித்து செயல்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் 3 இடத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நூஸ்மா பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×