என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
- நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது ஒரு இலவச சேவையாகும். இதில் பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.
இந்த முகாமில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10&ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story