என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
- ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
- அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் போயர்தெரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை வேனில் ஏற்றி கொண்டு முதுகம்பட்டி பகுதியை நோக்கி சென்று கொண்டி ருந்தது. அப்போது ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.