என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
- பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை, சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும், இந்த முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






