என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
- நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
- மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெலகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இதனால் மனவேதனையில் இருந்த மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மஞ்சுநாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






