என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த சூரிய பிரகாஷ்.
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
- பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த சூரிய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிவா காலணி தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்.கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள்,1 மகன் உள்ளனர்.
இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மகன் சூரிய பிரகாஷ் பி.இ.சி.எஸ்.இ படித்து முடித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி வீட்டிற்கு வந்த சூரிய பிரகாஷ் கடந்த சில நாட்களாக கடன் பிரச்ச னையில் சிக்கி தவித்துள்ளார்.
சம்பவத்தன்று மனவே தனையில் இருந்த சூரிய பிரகாஷ் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது தந்தை அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூரிய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இறப்பு குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






