என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரதம மந்திரி விவசாய நீர்பாசன குழு திடீர் ஆய்வு
- பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
- விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், தளி மற்றும் வேப்பனபள்ளி ஆகிய வட்டாரங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் 52 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை அலுவலகத்திலிருந்து சிறப்பு ஆய்வுக்குழுவாக வேளாண்மை துணை இயக்குநர் பூங்கோதை, வேளாண் உதவி இயக்குநர் மணமல்லி, கணக்கு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் புஷ்பநாதன் ஆகியோர் கொட்டாவூர் நீர்வடிப்பகுதியில் நுழைவுக் கட்டப்பணிகளான உலர்களம் அமைப்பு இயற்கைவள மேம்பாட்டுப் பணிகளான தடுப்பணை, கசிவுநீர் குட்டை, பண்ணை உற்பத்தி திட்டத்தில் விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விசைத் தெளிப்பான் 4 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தீவனப்புல் வெட்டும் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், தையல் எந்திரம் 15 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பணிகளான சுழல் நிதி 5 குழுவிற்கு விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், 4 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, 2 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
மேலும், கொட்டாவூர் நீர்வடிப்பகுதி தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான மதிவாணன், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அந்த நீர்வடிப்பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்று கொட்டாவூர் நீர்வடிப்பகுதி சிறப்பு குழுக் கூட்டம் நடத்தி வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் நேரடியாக கேட்டறிந்து சிறப்புக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வேப்பனஹள்ளி நீர்வடிப்பகுதியில் பொம்மரசனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் அம்ரித் சரோவர் பணி (அம்ரித் குளம்) கசிவுநீர் குட்டை ஆய்வு செய்தனர். அப்போது நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர்கள் பரமானந்தம், பிரபு, சுப்பிரமணி, இனியம், தவ்லத்பாஷா மற்றும் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்