என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் ஆயுத பூஜையையொட்டி  பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
    X

    தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

    • சாமந்தி விலை உயர்ந்து 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஏப்ரல் மாதம் சாகுபடிப் பணிகளைத் தொடங்கும் விவசாயிகள், செப்டம்பர் மாதத்தில் பூக்களை அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டு மல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக சரிவை கண்டுள்ளது.

    ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சரஸ்வதி, ஆயுத பூஜைக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வழி பாட்டுக்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும்.

    இதனையடுத்து தருமபுரி பூக்கள் சந்தையில் நேற்று சாமந்தி, தரத்திற்கு ஏற்ப ரூ.60- முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ேமலும் விலை உயர்ந்து 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல, ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனையான செண்டு மல்லி தற்போது ரூ50 க்கும் சம்பங்கி ரூ.100 ரூபாயிலிருந்து 120 ரூபாயும், சன்னமல்லி 600 ரூபாய், அதேபோல் குண்டு மல்லி இன்று 600 ரூபாய்க்கும், காக்கடா 240 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாயில் இருந்து 240 ரூபாய், பன்னீர் ரோஸ் ரூ.140 என விற்பனை செய்யப்பட்டது.

    இந்த விலையேற்றத்தால் இன்று பூக்கள் சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×