என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி
    X

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி

    • பரமத்திவேலூர் தாலுக்கா பகுதியில் பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், செல்லப்பம்பாளையம், நகப்பாளையம், சாணார்பாளையம், பரமத்திவேலூர், பரமத்தி, மோகனூர், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து பரமத்திவேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

    தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் பரமத்தி வேலூரில் உள்ள 2 பூ ஏல மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து அதிகமானது. பரமத்திவேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் கடந்த வாரம் 1500 ரூபாய்க்கு விற்பனையான கிலோ குண்டுமல்லி நேற்று 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 50 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 130வது ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இதேபோல் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 140 ரூபாய்க்கும், விற்பனையாகின. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும் அதனால் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது வரும் காலங்களில் குண்டு மல்லி பூ மேலும் விலை சரிவடையும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லி பூ கிலோ 3 ஆயிரத்துக்கு விற்பனை ஆகியது. தற்போது கிலோ 300 ரூபாய் என விலை சரிந்தது. எதிர்பாராத வகையில் குண்டு மல்லி பூக்கள் விலை சரிந்ததால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    Next Story
    ×