search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை சரிவு
    X

    தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள பூக்களை படத்தில் காணலாம்.

    வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை சரிவு

    • முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொடும் மற்ற நாட்களில் சராசரியாகவும் சில நாட்களில் படுவீழ்ச்சியில் பூக்களின் விலை உள்ளது.
    • இன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பூக்கள் சந்தையில் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை சற்று சரிந்து உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குண்டுமல்லி, சன்னமல்லி, காக்டா, ஜாதி மல்லி, மூக்குத்தி, அரளி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், நந்தியாவட்டம், கோழிகொண்டை, செண்டு மல்லி, சாமந்தி, உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் பூக்கள் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    பண்டிகை காலங்கள், கோவில் கும்பாபிஷேகம், அமாவாசை, பௌர்ணமி,சுப முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொடும் மற்ற நாட்களில் சராசரியாகவும் சில நாட்களில் படுவீழ்ச்சியில் பூக்களின் விலை உள்ளது.

    ஜூன் மாதத்தில் 18ஆம் தேதி வரை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் ஜூன் 19ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை முகூர்த்த தினங்கள் சுப காரியங்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிந்துள்ளது வரும் 28, 29ஆம் தேதிகளில் சுப முகூர்த்த நாள் என்பதால் அப்போது விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பூக்கள் சந்தையில் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை சற்று சரிந்து உள்ளது.

    சன்னமல்லி கிலோ 220 ரூபாய், குண்டுமல்லி கிலோ 260 ரூபாய், காக்டா கிலோ 240 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 260 ரூபாய், மூக்குத்தி பூ கிலோ 260 ரூபாய், சம்பங்கி கிலோ 25 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 60 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 60 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×