என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி வரத்து அதிகரிப்பால் கத்திரிக்காய் வெண்டைக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி
    X

    தருமபுரி வரத்து அதிகரிப்பால் கத்திரிக்காய் வெண்டைக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி வரத்து அதிகரிப்பால் கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் காய்கறிகளை விளைப்பதில் ஆர்வம் காட்டி வருவதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக, தக்காளி, சிறிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பாகற்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் வரத்து குறைந்தது. அதனால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    தக்காளி, சிறிய வெங்காயம், இஞ்சி ஆகியவை, கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. மற்ற காய்கறிகள், கிலோ 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. இதனால், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் கத்திரி, வெண்டை, பாகற்காய், முள்ளங்கி, சுரைக்காய் ,உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளும் பயிரிட்டு வருகின்றனர். காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைய தொடங்கியுள்ளது மேலும் கத்திரிக்காய் விலை அதிக வரத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.பொதுவாக கத்தரிக்காய் டிசம்பர்-ஜனவரி, மே-ஜூன், அக்டோபர்- நவம்பர் என 3 பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நட்டு 40 நாள்களில் அறுவடைக்கு வரும்.

    அடுத்து 110 நாள்கள் வரை பலன் கொடுக்கும். தருமபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வெண்டைக்காய் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் இங்கு விளையும் பச்சைக் கத்திரிக்காய் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் பெரும்பாலும் நீல நிற கத்திரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பதாலும் அனைத்து விசேஷங்களுக்கும் கத்திரிக்காய் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது பரவலாக தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் கத்திரிக்காய் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால் வரத்து அதிகரித்துள்ளது இதனால் உழவர் சந்தையில் கிலோ 8 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது விவசாயிகளிடத்தில் கிலோ

    3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமார்க்கெட்டில் 8 ரூபாய் முதல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×