என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் நகை, செல்போன் பறித்த மர்ம ஆசாமிகள்
- சாலையில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
- 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி ஆஷா (எ) அகிலா (32).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் ஒரு முகவரியை கொடுத்து விசாரிப்பது போல நடித்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அகிலா அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அகிலா தந்த புகாரின்பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
Next Story






