என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்பவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு
- தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்ற வர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளதாவது:-
2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்பட உள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டா ருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப் பிக்கலாம். ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழும தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்ற வர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். பிற விண்ணப்பதாரர்கள் 18-9-2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள். இந்த Category IV-இன் படி தனித்தேர்வராக விண்ணப் பித்து, முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு அனுமதிக்கப்படுவர்.
தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்ப தாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்த குதியை பெற்றிருக்க வேண்டும். தனி தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு , ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கான தேர்வு கட்டணத்தை www.karuvoolam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட சாந்தி, தெரிவித்துள்ளார்.






