search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் ஆகாமல் கர்ப்பிணி ஆன இளம்பெண் பிரசவத்தில் உயிரிழப்பு- டாக்டரிடம் போலீசார் விசாரணை
    X

    திருமணம் ஆகாமல் கர்ப்பிணி ஆன இளம்பெண் பிரசவத்தில் உயிரிழப்பு- டாக்டரிடம் போலீசார் விசாரணை

    • 8 மாத கர்ப்பிணி ஆன இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    • இளம்பெண்ணில் உடல்நிலை திடீரென மோசமானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான நிலையில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்தபோது அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், வாலிபர் ஒருவரிடம் பழனியதால் அவர் கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.

    8 மாத கர்ப்பிணி ஆன நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

    அதேநேரம் இளம்பெண்ணில் உடல்நிலை மோசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த இளம்பெண்ணை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற இளம்பெண் பிரசவத்தின்போது இறந்த சம்பவம் வாழப்பாடிபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் சிகிச்சை அளித்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    Next Story
    ×