search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்தாலம் அருகே நாளை மின்நிறுத்தம்
    X

    குத்தாலம் அருகே நாளை மின்நிறுத்தம்

    • கடலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • இதனால் திருமணஞ்சேரி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.

    மயிலாடுதுறை:

    குத்தாலம் அருகே கடலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழன்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×