search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாசர்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    வியாசர்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச்.ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர், எம்.பி.எம்.தெரு, சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்திய மூர்த்தி நகர் 1 முதல் 25-வது தெரு வரை சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×