சிதம்பரத்தில் நாளை மின்நிறுத்தம்

சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
சிதம்பரத்தில் நாளை மின்நிறுத்தம்
Published on

கடலூர்:

சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.  இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com