search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி மையத்திற்கு தரமற்ற பெயிண்ட் அடிப்பு
    X

    அங்கன்வாடி மையத்திற்கு தரமற்ற பெயிண்ட் அடிப்பு

    • மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் பஞ்சாயத்து அங்கன்வாடி மையத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெயிண்ட் அடிக்க டெண்டர் எடுத்தவர்கள் வந்த பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெயிண்ட் தரமற்றதாக இருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் சக்திவேல் உள்ளிட்டோர் அங்கன்வாடி மையத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் பெயிண்ட் அடிப்பதை தடுத்தனர். மேலும் இதுகுறித்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்பு நேற்று காலை பெயிண்ட் அடிப்பதற்காக வந்தவர்கள் தரமற்ற அதே பெயிண்ட் எடுத்து வந்து அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து அங்கு வந்த மேலாண்மை குழு உறுப்பினர் சக்திவேல் ஏற்கனவே கட்டிடத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் உங்களுக்கு தகவல் தெரிவித்தும், மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×