என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி அருகே டவுன் பஸ்சின் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் போலீசார் வலை வீச்சு
    X

    புவனகிரி அருகே டவுன் பஸ்சின் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் போலீசார் வலை வீச்சு

    • சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சினை வீரமணி (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் சாத்தப்படாடி புதுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சினை நிறுத்தினார். பஸ்சில் இருந்தவர்கள் கீழே இறங்கி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பிடிக்க ஓடினர். அவர்கள் தப்பிவிட்டனர்.இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் சென்ற பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து டிரைவர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×