search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான பள்ளி மாணவி மீட்பு
    X

    கோப்பு படம்

    மாயமான பள்ளி மாணவி மீட்பு

    • வடமதுரை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
    • அவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் 11-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரை மீண்டும் படிக்க சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறினார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நாகசாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவி காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து மாணவியை மீட்டு அவருக்கு அறிவுரை கூறி போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×